states

img

தெருவெங்கும் செங்கொடி.... சிவக்கும் மேற்குவங்கம்...

மேற்கு வங்க மாநிலத்தில் வரும் ஜூலை 8 அன்று உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நேரடியாக மக்கள் சந்திப்பு இயக்கம் மூலம் பிரச்சாரத்தை நடத்தி வருகிறது. பிரச்சாரத்தில்,”ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜகவின் கீழ் உள்ள பஞ்சாயத்துகள் ஊழலின் கூடாரமாக மாறிவிட்டன. மக்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் வழங்கப்படுவதில்லை, திட்டங்கள் மக்களை சென்றடையவில்லை. மக்கள் பாதிக்கப்படாத வகையில் ஒரு அமைப்பை உருவாக்கவே மார்க்சிஸ்ட் ஆகிய நாங்கள் பஞ்சாயத்து தேர்தலில் போராடுகிறோம்” என வலுவான கோரிக்கைகளுடன் சிபிஎம் வேட்பாளர்கள், ஊழியர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.